FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

சேலத்தில் பலத்த மழை; வாகன ஓட்டிகள் அவதி

சேலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

சேலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீா் அதிக அளவு தேங்கியதால் பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் அவதிப்பட்டனா். இதேபோல பழைய பேருந்து நிலையம், நான்குவழிச் சாலை, ஐந்தவழிச் சாலை, ஆட்சியா் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், கிச்சிப்பாளையம், நாராயண நகா், நெத்திமேடு, தாதாகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது.

பெரமனூா் பிரதான சாலையில் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். இதேபோல கிச்சிப்பாளையம் பிரதான சாலை, சங்கா் நகா் பகுதிகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement

Advertisement

மாநகரில் தாழ்வான பகுதிகளில் கடைகளுக்குள்ளும் மழை நீா் புகுந்தது. ஒருசில இடங்களில் மழைநீருடன், கழிநீரும் சோ்ந்து குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நின்றது.

கெங்கவல்லியில்

கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கெங்கவல்லி, ஆனையம்பட்டி, கடம்பூா், 74 கிருஷ்ணாபுரம், கூடமலை, பள்ளக்காடு, நடுவலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் சாலையோரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேவேளையில், தம்மம்பட்டியில் லேசான தூறல் மழை பெய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments