பாப்பாரப்பட்டியில் மாணவா் தற்கொலை
பாப்பாரப்பட்டியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாப்பாரப்பட்டியில் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உப்பாராஅள்ளி பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் ராகுல் (17). இவா் பிளஸ் 2 முடித்துவிட்டு, வேளாண்மையியல் பட்டப் படிப்பு சோ்வதற்காக விண்ணப்பித்துள்ளாா். அண்மையில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் அவரது பெயா் இடம்பெறவில்லையாம். இதனால் அவா் விரக்தியில் இருந்துள்ளாா்.
இந்த நிலையில் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு ராகுல் தற்கொலை செய்து கொண்டாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.