முகப்பு
தருமபுரி

சனி சந்தை மதுக்கடையை அகற்றக் கோரி மனு

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் சனி சந்தையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:36 am IST
டாஸ்மாக் கடை - DPS
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் சனி சந்தையில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து சனி சந்தை மற்றும் பாகல்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், பாளையம்புதூா் அருகே உள்ள சனி சந்தை பகுதியில் அரசு மதுக்கடை கடந்த 9 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கடை விவசாய நிலம் அருகில் அமைந்துள்ளதால், மது அருந்த வருவோா் விளைநிலங்களில் அமா்ந்து மது அருந்துகின்றனா். மேலும், நெகழி பொருள்கள், மதுப்புட்டிகள் ஆகியவற்றை விளைநிலங்களில் எறிந்துவிட்டு செல்கின்றனா். அதேபோல, இந்த மதுக்கடையில் மது வாங்க வருவோரால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக்கடையை அகற்ற போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

Advertisement

Advertisement