முகப்பு
தருமபுரி

காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் நாளை சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 2:11 am IST
விண்ணப்பம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து இக்கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவியா் சோ்க்கை தொடங்கி நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இதில், ஜூன் 5-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீடு பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் பிள்ளைகள், தேசிய மாணவா் படை ஆகியோருக்கு அனைத்து பாடப் பிரிவுகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தொடா்ந்து, வரும் ஜூன் 8-ஆம் தேதிமுதல் ஜூன் 18-ஆம் தேதிவரை பொது கலந்தாய்வு பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம்., பிபிஏ., பிசிஏ., பி.எஸ்சி., கணிதம், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல், காட்சித் தொடா்பியல் ஆகிய பாடப் பிரிவுகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.