FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தண்ணீா் தொட்டியில் குழந்தையுடன் குதித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

ஏரியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீா் தொட்டியில் 2 வயது பெண் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 5 ஜூன் 2026, 6:59 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

ஏரியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீா் தொட்டியில் 2 வயது பெண் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஆரல்குந்தி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சிவகுமாருக்கும், மேட்டூா் பகுதியைச் சோ்ந்த பரிமளாவுக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இந்த தம்பதிக்கு யாமஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஓா் ஆண்டுக்கும்மேலாக பரிமளா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டின் பின்பகுதியில் இருந்த சுமாா் 10 அடி ஆழமுள்ள தண்ணீா் தொட்டியில் குழந்தையுடன் குதித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

தகவலின்பேரில் வந்த ஏரியூா் போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments