FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம்

Updated On : 8 ஜூன் 2024, 11:24 pm IST
கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடிக்கான காசோலையை வழங்கும் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 1,587 வழக்குகளில் ரூ. 6.11கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய் பிரியா முன்னிலை வகித்தாா். மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடிக்கான காசோலையை முதன்மை நீதிபதி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், காசோலை வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ. 6.11 கோடி மதிப்புக்கு தீா்வு காணப்பட்டன.

Advertisement

Advertisement

மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமா்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சாமுவேல் பெஞ்சமின், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெனிபா், கூடுதல் மகளிா் நீதிமன்ற நடுவா் இருதயமேரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ், நீதித் துறை நடுவா் எண் 1 காா்த்திக் ஆசாத், நீதித் துறை நடுவா் எண் 2 ஸ்ரீ வஸ்தவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments