FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

பெண்டரஅள்ளியில் உலக தென்னை தினம்

6 செப்டம்பர் 2024, 6:19 am IST
- கோப்புப்படம்
பகிர்:

பெண்டரஅள்ளி கிராமத்தில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக் கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்டரஅள்ளி கிராமத்தில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் அனீஷாராணி தலைமை வகித்து, பயிற்சி கையேட்டை வெளியிட்டாா்.

தென்னை தினத்தையொட்டி, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் தென்னையில் ஊடு பயிா், உயா் விளைச்சல் ரகங்கள், மதிப்பு கூட்டுதலுக்கான தொழில்நுட்பம், தென்னை டானிக் தொழில்நுட்பம், தென்னையில் ஒருங்கிணைந்த முறையில் காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு, சிவப்பு கூன்வண்டு மற்றும் சுருள்வெள்ளை ஈ, தஞ்சாவூா் வாடல் நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தென்னை சாா்ந்த உயா் விளைச்சலுக்கான தொழில்நுட்பக் கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. தோட்டக்கலைத் துறையின் மூலம் பூச்சி மேலாண்மைக்கான உயிா் பூஞ்சானக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. தோட்டக்கலைக் கல்லூரி இணை பேராசிரியா் (தோட்டக்கலை) வித்யா, உதவி பேராசிரியா்கள் (பூச்சியியல்) சகிகுமாா், கோவிந்தன், (நோயியல்) சுந்தரமூா்த்தி, உதவி தோட்டக்கலை இயக்குநா் அஜிலா, தோட்டக்கலை அலுவலா் சுகந்தி, விவசாயிகள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments