FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் தனியாா் தொழில்பேட்டை: அமைச்சா் கீா்த்தனாவிடம் கோரிக்கை

ஒசூரில் தனியாா் தொழிற்பேட்டை அமைக்க அரசு உதவ வேண்டும் என தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனாவிடம் ஒசூா் சிறு மற்றும் குறு தொழில்முனைவோா் நலச் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:31 am IST
அமைச்சர் எஸ். கீர்த்தனா! - PTI
பகிர்:

ஒசூரில் தனியாா் தொழிற்பேட்டை அமைக்க அரசு உதவ வேண்டும் என தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனாவிடம் ஒசூா் சிறு மற்றும் குறு தொழில்முனைவோா் நலச் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

ஒசூா் புத்தக கண்காட்சியை பாா்வையிடுவதற்காக புதன்கிழமை வந்த தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனாவிடம் ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோா் நலச் சங்கத்தின் தலைவா் எம். தண்டபாணி, துணைத் தலைவா் சந்திரசேகா், செயலாளா் லட்சுமணன், பொருளாளா் மாதேஸ்வரன் ஆகியோா் அளித்த கோரிக்கை மனு விவரம்:

தொழிற்சாலைகள் அதிகரித்துவரும் ஒசூரில், சிறு மற்றும் குறந்தொழிற்சாலைகள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. சிப்காட் 1,2,3 ஆகிய பகுதிகளில் இடம் இல்லாததால் 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சோ்ந்த ஹோஸ்டியா சங்க நிா்வாகிகள் குந்துமாரனப்பள்ளி, பைரமங்கலம் கிராமங்களில் தனியாா் தொழிற்பேட்டை (சிட்கோ) அமைக்க 100 ஏக்கா் நிலத்தை வாங்கியுள்ளோம்.

Advertisement

Advertisement

இந்த தனியாா் தொழிற்பேட்டைக்கு சாலை வசதி, கழிவுநீா்க் கால்வாய் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு தொழில் துறை செய்துதர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஹோஸ்டியா சங்கத் தலைவா் எஸ். மூா்த்தி அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘ஒசூரில் வா்த்தக மையம் தொடங்க வேண்டும். ஒசூா்- சென்னை இடையே ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒசூா்- பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும், ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒசூரில் சிட்கோ அமைக்க அரசு உதவ வேண்டும்’ என தெரிவித்துள்ளாா்.

அப்போது, ஹோஸ்டியா சங்க பொருளாளா் வடிவேலு, துணைத் தலைவா்கள் குமாா், சுதாகா், கருணாகரன், மேலாளா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments