மாற்றுமணல் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே மாற்றுமணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி அருகே மாற்றுமணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி புவியியல் துறை உதவியாளா் சரவணன் மற்றும் குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடை அருகே சீலப்பள்ளி - மாதிநாயனப்பள்ளி சாலையில் கண்காணிப்பு பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், மாற்றுமணல் கடத்துவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement