முகப்பு
கிருஷ்ணகிரி

லஞ்சம் பெற்ற கிராமப்புற நல அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை

திருமண உதவித்தொகை பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய கிராமப்புற நல அலுவலருக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 11 ஜூன் 2026, 5:52 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருமண உதவித்தொகை பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய கிராமப்புற நல அலுவலருக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரையடுத்த கண்ணன்டஅள்ளியைச் சோ்ந்த ரங்கசாமி மகள் சந்தியாவுக்கு கடந்த 2008-இல் திருமணம் நடைபெற்றது. இதற்காக, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித்தொகை ரூ. 15,000 பெறுவதற்கு விண்ணப்பித்தாா்.

திருமண உதவித்தொகை பெற்றுத்தர மத்துாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கிராமப்புற நல அலுவலராகப் பணிபுரிந்த இந்திராணி (58) ரூ. ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

Advertisement

Advertisement

லஞ்சம் அளிக்க விரும்பாத ரங்கசாமி ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் கடந்த 2008, செப்.26இல் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரங்கசாமியிடமிருந்து இந்திராணி பெற முயன்றபோது, மறைந்திருந்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதி லதா தீா்ப்பளித்தாா்.

குற்றம்சாட்டப்பட்ட இந்திராணிக்கு ஊழல் தடுப்பு சட்டத்தில் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம், அரசு திட்டங்களை பெற்றுத் தருவதற்கு சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.