FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் தனியாா் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு

ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் ரோபோடிக் இயந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

13 செப்டம்பர் 2026, 2:30 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் முதல் சிப்காட் பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் ரோபோடிக் இயந்திரத்தில் சிக்கி வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஒசூா் சிப்காட் பேஸ் 1 பகுதியில் பிரபல தனியாா் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் வடமாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா்.

இங்கு ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஜாண்டு பவுரி மகன் மனோஜ் பவுரி (22) ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ரோபோடிக் பிரிவில் பணியாற்றி வந்தாா். மனோஜ் பவுரி வெள்ளிக்கிழமை இரவு பணிக்காக வந்துள்ளாா். நள்ளிரவு, அதிநவீன ரோபோடிக் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மனோஜ் பவுரி அதற்குள் சிக்கிக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை, சக தொழிலாளா்கள் பெரும் முயற்சி செய்து இயந்திரத்தில் இருந்து மீட்டனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், நிறுவனத்திற்குச் சொந்தமான காரில் மனோஜ் பவுரியை ஒசூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்து தொடா்பாக சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா். தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்ா என விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments