அழகுமுத்து முனியப்பன் கோயில் திருவிழா
சட்டையம்புதூர் அழகுமுத்து முனியப்பன் கோயில் ஆடித் திருவிழா புதன்கிழமைநடைபெற்றது.
சட்டையம்புதூர் அழகுமுத்து முனியப்பன் கோயில் ஆடித் திருவிழா புதன்கிழமை
நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற அழகுமுத்து முனியப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவில் முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் மொட்டை அடித்தும், பெண்கள் பூமுடி எடுத்தும் காணிக்கை செய்தனர். வேண்டுதல்களாக பக்தர்கள் மண் உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமியின் காலடியில் வைத்து வழிபாடு செய்தனர். மேலும், விரதமிருந்து வேல் காணிக்கை சாற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.