FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் அருகே புல்லாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி (60), கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Updated On : 26 ஜூன் 2018, 9:39 am IST
பகிர்:

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் அருகே புல்லாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த மணி (60), கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த மணி சிகிச்சைக்காக நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை மாலை கழிவறைக்கு சென்ற மணி தான் உடுத்தியிருந்த வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிக்கும், அவரது மகன் சுரேஷுக்கும் கடந்த ஓர் ஆண்டாக நிலம் சம்பந்தமான பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணி தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments