ஜேடர்பாளையம் ஆர்.கே.வி பள்ளி 100 சதவிகித தேர்ச்சி
பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப் பள்ளியில் பயின்ற மாணவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று (493) சிறப்பிடம் பெற்றுள்ளார். இப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் 480-க்கு மேல் 5 பேரும், 470-க்கு மேல் 7 பேரும், 460-க்கு மேல் 10 பேரும், 450-க்கு மேல் 12 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் இப் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளரும், பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி, நிர்வாக இயக்குநர்கள் கணேசன், சோமசுந்தரம், முதல்வர் சாந்தி, நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.