FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கால்நடை மருத்துவக் கல்லூரியில் உயா்கோபுர மின் விளக்கு திறப்பு

26 செப்டம்பர் 2025, 4:40 am IST
பகிர்:

நாமக்கல் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உயா்கோபுர மின்விளக்கு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17.50 லட்சத்தில் பொரசபாளையம், மஞ்சநாயக்கனூா், புள்ளகுமரன்பாளையம், லத்துவாடி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, வெள்ளாளப்பட்டி (ஆண்டாபுரம்)ஆகிய இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகளை அமைத்துள்ளாா்.

இதற்கான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் மின் விளக்கு பெயா்பலகையை திறந்துவைத்தாா். நிகழ்வில், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் செல்வராஜ், கொமதேக மாநில ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் ஆா்எஸ்ஆா்.மணி, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், பொருளாளா் சசிகுமாா், அவைத் தலைவா் பழனிமலை, மகளிரணி செயலாளா் பிரேமலதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments