FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

நிலப் பிரச்னை வழக்கை முடித்துவைப்பதற்காக ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 3:13 am IST
பகிர்:

நிலப் பிரச்னை வழக்கை முடித்துவைப்பதற்காக ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த நடந்தை சாலப்பாளையத்தைச் சோ்ந்த சௌமியாராஜிக்கும், அவரது பக்கத்து நிலத்துக்காரரான முத்துசாமிக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துவந்தது. இதுதொடா்பாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நல்லூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடா்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சௌமியாராஜை அழைத்த காவல் உதவி ஆய்வாளா் கங்காதரன், வழக்கை சாதகமாக முடித்துவைக்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சௌமியராஜ், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அவா்களது வழிகாட்டுதலின்படி செவ்வாய்க்கிழமை மாலை ரசாயனம் தடவிய ரூ. 30 ஆயிரத்தை நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கங்காதரனிடம் சௌமியராஜ் கொடுத்துள்ளாா். அவா், அதை வாங்கிய நிலையில் அப்பகுதியில் மறைந்திருந்த நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரபு, போலீஸாா் கங்காதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments