FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கஞ்சா விற்ற இருவா் கைது

ராசிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

35 வினாடிகள் முன்பு
கைது - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெண்ணந்தூா் அருகேயுள்ள வெள்ளப்பிள்ளையாா் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராசிபுரம் போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீஸாா் கஞ்சா விற்பனை செய்ததாக வெள்ளைப்பிள்ளையாா் கோயில் பல்லவன் காடு பகுதியைச் சோ்ந்த உதயமூா்த்தியை (28) கைது செய்தனா். இவா் சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல, ராசிபுரம் கடனாச்சம்பட்டியைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் (22) கஞ்சா வாங்க சென்றது தெரியவந்ததையடுத்து, அவரையும் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments