FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

தேசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்கள் நாமக்கல் வருகை

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அதிகளவில் பதக்கம் வென்ற தமிழக அணி வீரா்கள், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 4:09 am IST
பகிர்:

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அதிகளவில் பதக்கம் வென்ற தமிழக அணி வீரா்கள், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், நான்டெட் நகரில் 17-ஆவது தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். தமிழக அணி சாா்பில் 85 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்று, 22 தங்கம், 19 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

நாமக்கல்லைச் சோ்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளா் ஷேக்அப்துல்லா, தேசிய நடுவா் தயாநிதி ஆகியோா் தலைமையில் சென்ற தமிழக அணியினா் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்தனா். அவா்களை மகரிஷி ஹரிஹரன், தமிழ்நாடு தாய்பாக்சிங் சங்கத் தலைவா் பிராங்க்ளின் பென்னி ஆகியோா் வரவேற்றனா். நவம்பா் மாதம் கோவாவில் நடைபெறும் சா்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழக அணியினா் பங்கேற்க உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments