FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10 போ் காயம்

விபத்து - பிரதிப் படம்
பகிர்:

ராசிபுரம் அருகே லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ், திருச்செங்கோடு கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வேனில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தனா். இந்த வேன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேலம்-–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூா்கேட் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. லாரி ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் வேனில் இருந்த 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் வீடுதிரும்பினா்.

Advertisement

Advertisement

விபத்து தொடா்பாக ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments