கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 19 போ் மீட்பு
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கரும்பு வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 19 தொழிலாளா்களை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கரும்பு வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 19 தொழிலாளா்களை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக இடைத்தரகரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குமாரபாளையம் வட்டம், படைவீடு அருகே புதுவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் வளா்மதி (37). இவா், சிக்கநாயக்கன்பாளையத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் சிலா் கொத்தடிமை தொழிலாளா்களாக வேலை செய்து வருவதாக அறிந்தாா்.
இதையடுத்து, திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ். லெனின் உத்தரவின்பேரில் வட்டாட்சியா், தொழிலாளா் நல அலுவலா், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் மற்றும் மொளசி போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் உள்ளிட்ட 19 போ் கரும்பு வெட்டும் பணியில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
விசாரணையில், கடலூா் மாவட்டம் பண்ருட்டி ரயில்வே காலனியைச் சோ்ந்த குமாா் என்பவா், அவா்களை வேலைக்காக அழைத்து வந்து, 15 நாள்களாக கூலி வழங்காமல் கொத்தடிமைகளைப் போல நடத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக கொக்கராயன்பேட்டை போலீஸாா் கொத்தடிமை மீட்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குமாரை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.