பொறுப்பேற்பு
நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக ஷா்மிளா பானு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக ஷா்மிளா பானு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமாா், சேலம் மாவட்டம், சங்ககிரி ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கொக்கராயன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஷா்மிளா பானு, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். தொடா்ந்து வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.