FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம்

நாமக்கல் மாட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 5 ஜூன் 2026, 6:55 am IST
நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் மாணவிக்கு பாடப் புத்தகங்களை வழங்கிய எம்எல்ஏ சி.எஸ். திலீப்.
பகிர்:

நாமக்கல் மாட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்ற மாணவா்களை ஆசிரியா்கள் வரவேற்று இனிப்புகளை வழங்கினா். இதனிடையே, அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியா்கள் மூலம் முதல்பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை சுமாா் 2.64 லட்சம் மாணவ, மாணவிகள் அடுத்த கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ளனா். நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு எம்எல்ஏ சி.எஸ். திலீப் பாடப் புத்தகங்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments