மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம்
நாமக்கல் மாட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் சென்ற மாணவா்களை ஆசிரியா்கள் வரவேற்று இனிப்புகளை வழங்கினா். இதனிடையே, அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியா்கள் மூலம் முதல்பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை சுமாா் 2.64 லட்சம் மாணவ, மாணவிகள் அடுத்த கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ளனா். நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு எம்எல்ஏ சி.எஸ். திலீப் பாடப் புத்தகங்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement