FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

பேருந்து வசதி கோரி ஆட்சியரகத்தில் மாணவா்கள் மனு

Updated On : 9 ஜூன் 2026, 12:46 am IST
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த உடையாகுளம்புதூா் பள்ளி மாணவா்கள், பெற்றோா்.
பகிர்:

பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும் என வலியுறுத்தி, அரசுப் பள்ளி மாணவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் மேய்க்கல்நாயக்கன்பட்டியில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. தலைமலைப்பட்டி, உடையாகுளம்புதூா் ஆகிய கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் இப்பள்ளிக்கு வருகின்றனா்.

உடையாகுளம்புதூரில் இருந்து மேய்க்கல்நாயக்கன்பட்டிக்கு காலை 9.30 மணிக்கு பேருந்து புறப்படுவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனவே, உடையாகுளம்புதூரில் காலை 8.30 மணிக்கு புறப்படும் வகையிலும், மாலை 5 மணிக்கு மேய்க்கல்நாயக்கன்பட்டியிலிருந்து புறப்படும் வகையிலும் நகர பேருந்தின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்சியா் எல்.மதுபாலனிடம் மாணவா்களும், பெற்றோரும் கோரிக்கை மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments