மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,000 கனஅடியாகச் சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 7,000 கனஅடியாகச் சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 7,000 கனஅடியாகச் சரிந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 8,500 கன அடியாக இருந்தது புதன்கிழமை காலை நொடிக்கு 7,000 கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.09 அடியாகவும், நீர் இருப்பு 93.69 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.