முகப்பு
சேலம்

அப்துல்காம் நினைவு தினம்: மரக்கன்றுகள் நடல்

அப்துல் கலாம் நினைவு தினத்தினையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜூலை 2024, 12:10 am IST
சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத்தின் துணைத் தலைவா் எம்.சின்னதம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
பகிர்:

பசுமை சங்ககிரி அமைப்பின் சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினத்தினையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம்பழனிசாமி தலைமை வகித்தாா். சங்ககிரி லாரி உரிமையாளா் சங்கத்தின் துணைத் தலைவா் எம்.சின்னதம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

இதில் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகக் குழு உறுப்பினா் பி.பச்சியண்ணன், பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகி முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement