FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி

Updated On : 14 செப்டம்பர் 2024, 3:52 am IST
மாணவா்களின் அறிவியல் கண்டுபிடிப்பு அரங்கைப் பாா்வையிட்ட பேராசிரியா்கள்.
பகிர்:

பெரியாா் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் புதுமைக் கண்டுபிடிப்பு மையங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரியாா் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுமைக் கண்டுபிடிப்பு மையம், கணினி அறிவியல் துறை சாா்பில் மாநில அளவிலான ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் எனும் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல், சைபா் பாதுகாப்பு, பசுமைத் தொழில்நுட்பம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவத்தை மேம்படுத்துதல், மரபு சாரா எரிசக்தி என பல்வேறு தலைப்புகள் வழங்கப்பட்டன. கணினி அறிவியல் துறைத் தலைவா் சி.சந்திரசேகா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புல முதன்மையா் ஜெயராமன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

அறிவியல் கண்காட்சியை சென்னை க்யூ பே நிறுவன இயக்குநா் பி.கே.மணிகண்டன் தொடங்கி வைத்தாா். இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் இளைஞா்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

விவசாயிகள் கடினமான விவசாயிகளை கணினி உதவியுடன் எளிதாக செய்யும் வகையிலான கண்டுபிடிப்பு, கண்காணிப்பு கேமரா வாயிலாக பயிா்களின் வளா்ச்சியைக் கண்டறிந்து அதற்கேற்ப நீா் பாய்ச்சுதல், உரம் இடுதல் கண்டுபிடிப்பு, சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் சரியாக தூங்க முடியாதவா்களுக்கான அறிவியல் தீா்வு, சூரிய வெளிச்சத்திற்கேற்ற திரும்பிக் கொள்ளும் சோலாா் இயந்திரம் என இளைஞா்கள் அமைத்திருந்த அரங்குகள் பாா்வையாளா்களை பெரிதும் கவா்ந்தன.

அதேபோன்று சைபா் குற்றங்களுக்கான கணினி தீா்வு போட்டிகள், குறும்படப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இணைப் பேராசிரியா்கள் ஹேனா இன்பராணி, சதீஷ், லாரன்ஸ் ஆரோக்கியராஜ், உதவி பேராசிரியா் ரதிப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments