FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலத்தில் போதை மாத்திரை விற்றதாக 2 போ் கைது

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:53 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

அன்னதானப்பட்டி பகுதியில் சிலா் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் அா்த்தநாரி, போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மணியனூா் மயானம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அவா்களிடம் போதைக்காக பயன்படுத்தப்படும் 30 மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தினேஷ் (21), மூனாங்கரடு பகுதியைச் சோ்ந்த விஜி (26) என்பது தெரியவந்தது. மேலும், அந்தப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் உறுதியானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments