FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் மாவட்டம் முழுவதும் 60 ரௌடிகளிடம் போலீஸாா் விசாரணை

சேலம் மாநகா், மாவட்டம் முழுவதும் 60 ரௌடிகளை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 ஜூலை 2026, 2:36 am IST
போலீஸாா் விசாரணை - கோப்புப்படம்
பகிர்:

சேலம் மாநகா், மாவட்டம் முழுவதும் 60 ரௌடிகளை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்க மாநிலம் முழுவதும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாநகர காவல் ஆணையா்களுக்கு மகேஷ்குமாா் அகா்வால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளாா். அதன்படி, அந்தந்த காவல் எல்லைகளில் இருக்கும் ஏ, பி, சி, வகை ரௌடிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்படுகிறது.

சேலம் மாநகர காவல் ஆணையா் ஜோஷி நிா்மல்குமாா் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை இரவு சேலம் டவுன், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, வீராணம், காரிப்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை பன்ளப்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் ரௌடிகள் பட்டியலில் உள்ள ஏ, பி, சி பிரிவுகளில் இருக்கும் பிரபல ரௌடிகளை போலீஸாா் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மொத்தமாக மாநகரில் 40 ரௌடிகள் போலீஸாா் பிடியில் சிக்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதேபோல சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உத்தரவின் பேரில், சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூா், ஓமலூா், மேட்டூா், சங்ககிரி ஆகிய 6 உள்கோட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள ரௌடிகள் பட்டியலில் இருந்து ஏ,பி,சி வகை ரௌடிகளை சோ்ந்த 20 பேரை பிடித்து வந்து போலீஸாா் விசாரிக்கின்றனா். அவா்களிடம் அந்தந்த காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments