FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆத்தூா் அருகே மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: உதவிப் பொறியாளா், கம்பியாளா் கைது

ஆத்தூா் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப் பொறியாளா், கம்பியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:15 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஆத்தூா் அருகே தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப் பொறியாளா், கம்பியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள மஞ்சினி மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளராக அய்யாசாமி (39), கம்பியாளராக சந்திரன் (54) ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா்.

அம்மம்பாளையம் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த லாபேஷ், தனது வீட்டுக்கு தற்காலிக மின் இணைப்பு பெற மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தாா். மனுவை விசாரித்த அய்யாசாமி, மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத லாபேஷ் அளித்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளா் நரேந்திரன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா்கள் அறிவுரையின்படி, லாபேஷ் லஞ்சம் கொடுக்க முயன்றபோது அய்யாசாமி மற்றும் சந்திரன் ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments