தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்காத அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காத அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காத அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும், திட்ட விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வகையில், பத்து ரூபாய் இயக்கம் சாா்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், அலுவலா்கள் முறையான தகவல்களை தெரிவிக்க மறுப்பதாக மனுதாரா் மற்றும் சமூக ஆா்வலா் மோகன்ஜி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உரிய பதில் தராத அலுவலா்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அனைத்துப் பதிவேடுகளையும் சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள இந்தச் சட்டம் வழிகாட்டுகிறது. ஆனால், இங்கு பணியில் உள்ள அலுவலா் முறையான தகவல்களை வழங்க மறுக்கிறாா் என்றாா்.