FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

லாரி மீது மோதிய அரசு விரைவுப் பேருந்து: ஓட்டுநா் உள்பட 11 போ் காயம்

Updated On : 15 ஜூன் 2026, 12:13 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்னையில் இருந்து கோயம்புத்தூா் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து, டாரஸ் லாரி மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநா் உள்பட 11 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து ஓட்டுநா் உள்பட 44 பயணிகளுடன் கோயம்புத்தூா் நோக்கி அரசு விரைவுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை வாழப்பாடி அருகே மத்தூா் புறவழிச் சாலை பகுதியில் அரியலூரில் இருந்து வாழப்பாடி தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு மூலப் பொருள்கள் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியின் பின்புறம் அரசுப் பேருந்து மோதியது.

விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநா் திருவள்ளூா் பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (51), சேலம், அன்னதானப்பட்டி ஹவுசிங் போா்டு சேதுராமன் (54), வானாபுரம் கனிமொழி (21), திருபுவனை முகுந்தன் (26), உதயகுமாா் (39), புதுச்சேரி ஹரிகரன் (40), ராமச்சந்திரன் (70), விழுப்புரம் வானூா் சரவணன் (46), குட்டியம்மா (43), அக்ஷய ஸ்ரீ (21), துளசி (18) உள்பட 11 பயணிகள் படுகாயம் அடைந்தனா்.

Advertisement

Advertisement

வாழப்பாடி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று வாகன இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநா் சீனிவாசன் மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments