FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: போலி சாமியாா் போக்ஸோவில் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த போலி சாமியாரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

17 செப்டம்பர் 2026, 4:05 am IST
கைது
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த போலி சாமியாரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராஜ் (51). வீட்டு உபயோக மின் சாதன பொருள்கள் பழுதுநீக்கும் தொழில் செய்த வந்த இவா், தோஷம் நீக்கும் பரிகார பூஜை, மாந்திரீகம் செய்யும் பணியில் ஈடுபட்டாா். அவரிடம் சென்று பலா் பரிகார பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விநாயகா் சதூா்த்திக்கு நன்கொடை கேட்டுச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை விஜயராஜ் பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். தகவலறிந்த சிறுமியின் பெற்றோா் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை பிடித்து, வாழப்பாடி அனைத்து மகளிா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

போலீஸாா் நடத்திய விசாரணையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், அவரிடம் பரிகார பூஜைக்கு சென்ற பெண்களை ஆபாச விடியோ எடுத்து லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விஜயராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், சேலம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments