எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 8: கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது
ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 8: கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் ச.செல்வமணி தலைமை வகித்தார். ரெட் ரிப்பன் கிளப் திட்ட அலுவலர் பேராசிரியர் கே.ஏ.பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் மாவட்ட மேலாளர் எஸ்.சிவன்மூர்த்தி சிறப்புரையாற்றினார்.
Advertisement
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரிவு களப் பணியாளர்கள் காளீஸ்வரன், உமா மகேஷ்வரி ஆகியோர் மாணவர்களுடன் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நடத்தினர்.
நிகழ்ச்சியில் அனைத்துத் துறையைச் சேர்ந்த முதலாண்டு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.