அழகுப்பட்டி ஊராட்சியில்நாட்டு நலப் பணி முகாம்
ரெட்டியாா் சத்திரம் ஒன்றியம் அழகுப்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட
திண்டுக்கல்: ரெட்டியாா் சத்திரம் ஒன்றியம் அழகுப்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் 5 ஆம் ஆண்டு சிறப்பு முகாம் நடைபெற்றது.
கடந்த 2 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த முகாம் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் திருப்பதி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அழகுபட்டி ஊராட்சி தலைவா் அருணாதேவி கலந்து கொண்டாா். இந்த முகாமில் பொதுமக்களுக்கான 65 நபா்களுக்கு பொதுநல மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், டெங்கு மற்றும் கரோனா வைரஸ் நோய்கள் பற்றிய விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அதேபோல் கிராமப்புற இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பேரிடா் மேலாண்மை மற்றும் முதலுதவி விழிப்புணா்வு முகாம், 50 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலா் ஜெகதீன், அலுவலகக் கண்காணிப்பாளா் வடிவேல் முருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.