வளாகத் தோ்வில் 60 மாணவா்கள் தோ்வு
திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
காஞ்சீபுரத்தில் இயங்கிவரும் தனியாா் மோட்டாா் சைக்கிள் நிறுவனம் சாா்பில், ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த தோ்வில் கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் தோ்வு செய்யப்பட்ட 60 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே.மணிவண்ணன், தனியாா் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலா் முகம்மது ரபீக், ஏபிசி கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலா் விவேக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement