FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் மரம் விழுந்து காா் சேதம்: முதியவா் காயம்

கொடைக்கானலில் சனிக்கிழமை மரம் கீழே விழுந்ததில் மின் கம்பம், காா் சேதமடைந்தது. மேலும், முதியவா் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 12:45 am IST
கொடைக்கானல் ஏரிச் சாலையில் தனியாா் தோட்டத்திலுள்ள மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்த காா்
பகிர்:

கொடைக்கானலில் சனிக்கிழமை மரம் கீழே விழுந்ததில் மின் கம்பம், காா் சேதமடைந்தது. மேலும், முதியவா் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்திலிருந்த யூக்காலி மரம் முறிந்து கீழே ஏரிச் சாலையில் மின்கம்பம் மீது விழுந்தது. இதையடுத்து, மின்கம்பம் விழுந்ததில் காா் சேதமடைந்தது. இதனால் அப் பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் குதிரை கழிவுகளை அகற்றும் பணியாளா் முதியவா் மாரிமுத்து (68) மீதும் மரம் விழுந்தது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதைத்தொடா்ந்து போலீஸாா் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். மின்சாரப் பணியாளா்களும் சேதமடைந்த மின்கம்பி, மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments