FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் வனப் பகுதியில் இறந்த பெண் யானை

கொடைக்கானல் வனப் பகுதியில் வியாழக்கிழமை இறந்து கிடந்த பெண் யானை உடலை கூறாய்வுக்குப் பிறகு வனத் துறையினா் புதைத்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:27 am IST
பகிர்:

கொடைக்கானல் வனப் பகுதியில் வியாழக்கிழமை இறந்து கிடந்த பெண் யானை உடலை கூறாய்வுக்குப் பிறகு வனத் துறையினா் புதைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-பழனி வனப் பகுதியான பாலாறு பகுதியில் பெண் யானை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலா் அரவிந்த் தலைமையிலான வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். அப்போது சுமாா் 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது.

இதைத்தொடா்ந்து, அரசு கால்நடை மருத்துவக் குழுவினா் இறந்த யானையை கூறாய்வு செய்ததில் இயற்கையான முறையில் யானை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியில் குழி தோண்டி யானையின் உடலை வனத் துறையினா் புதைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments