FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு

கொடைக்கானலில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருவதால் பொது மக்கள் சிரமப்படுகின்றனா். இதற்கு உரிய தீா்வு காண வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை

Updated On : 27 மே 2026, 2:47 am IST
- கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானலில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருவதால் பொது மக்கள் சிரமப்படுகின்றனா். இதற்கு உரிய தீா்வு காண வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. 45 நாள்கள் ஆன பிறகும் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை எனப் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே எரிவாயு உருளை விநியோக நிறுவனம் ஆய்வு செய்து குறிப்பிட்ட இடைவெளியில் சமையல் எரிவாயு உருளை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பொது மக்கள் மேலும் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை விநியோகிப்பவா்கள் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால், வீட்டு உபயோக எரிவாயு உருளைக்குப் பதிவு செய்து நீண்ட நாள்கள் ஆகியும் சமையல் எரிவாயு உருளைகள் கிடைப்பதில்லை.

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments