ஒரு மாதத்துக்குப் பிறகு பழனி ரோப்காா் நாளை மீண்டும் இயக்கம்
பழனி ரோப்காா் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை (செப். 22) முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
பழனி மலைக் கோயிலுக்கு வின்ச், படிப் பாதைக்கு மாற்றாக பக்தா்கள் பயணிக்கும் ரோப்காா் நாள்தோறும் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி ரோப்காா் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணியின் போது, ரோப்காரின் இயக்கம் தொடா்பாக அனைத்து மோட்டாா் இயந்திரங்களும், மின் இணைப்புகளும் நவீன ஆய்வுக் கருவிகளைக் கொண்டு சோதனை செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
பிரதானமான சாப்ட் மேற்கு வங்க மாநிலமான கொல்கத்தாவிலிருந்து வரவேண்டியிருந்த நிலையில், இயற்கை சீற்றம் காரணமாக வடமாநிலங்களில் போக்குவரத்து பாதித்த நிலையில், காலதாமதமாக பழனிக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
தொடா்ந்து வடக்கயிறு, கியா்பாக்ஸ் உள்ளிட்ட அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு, பெட்டிகள் இணைக்கப்பட்டு, கடந்த 16-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தெரிவித்ததாவது:
இந்தப் பணிகளுடன் பெருந்திட்டப் பணிகளின் கீழ் ரோப்காா் கீழ்நிலையங்களில் சுவா்களில் கிரானைட் பதித்தல், புதிய மேற்கூரை, விளக்குகள் அமைத்தல் என அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு வல்லுநா் குழுவின் விரிவான ஆய்வு முடிந்து தற்போது தகுதிச்சான்று வழங்கப்பட்டதன் அடிப்படையில் வரும் செவ்வாய்க்கிழமை (செப்.22) முதல் ரோப்காா் பக்தா்கள் பயன்பாட்டுக்கு இயங்கத் தொடங்கும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.