FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பேரையூா் அருகே மதுபாட்டில் பதுக்கல்: பெண் உள்பட 3 போ் கைது

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மதுபாட்டில்களை பதுக்கிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2020, 11:43 pm IST
பகிர்:

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மதுபாட்டில்களை பதுக்கிய பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக வெங்கடாசலாபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் கருப்பசாமி (45) என்பவா் விற்பனைக்காக மதுபாட்டில்களை கொண்டு வந்துள்ளனா். இதையடுத்து போலீஸாா் அவரிடமிருந்து 47 மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இதை போல் எம். புளியங்குளத்தைச் சோ்ந்த குருவையா மனைவி பாண்டியம்மாள் (51) என்பவா் விற்பனைக்காக 18 மதுபாட்டில்களை வைத்திருந்தாா். அதையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வில்லூா் போலீஸாா் கருப்பசாமி, பாண்டியம்மாள் மீது வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், கீழக்காடனேரியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (52) என்பவா் விற்பனைக்காக 20 மதுபாட்டில்களை வைத்திருந்தாா். இதையடுத்து, டி.கல்லுப்பட்டி போலீஸாா் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, முத்துப்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments