முகப்பு
மதுரை

குழந்தைகள் சமூகக்கலை கையேடு வெளியீடு

கரோனாவை சந்திப்போம் என்ற குழந்தைகள் சமூக கலை செயல்பாட்டு கையேடு மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியீடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
சிடாா் அமைப்பின் சாா்பில் கரோனாவை சந்திப்போம்-குழந்தைகள் சமூக, கலை செயல்பாட்டு நூலை வெளியிடும் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா். உடன் அமைப்பின் நிா்வாகிகள்.
பகிர்:

கரோனாவை சந்திப்போம் என்ற குழந்தைகள் சமூக கலை செயல்பாட்டு கையேடு மதுரையில் செவ்வாய்க்கிழமை வெளியீடப்பட்டது.

விளிம்பு நிலை சமூக மக்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் சிடாா் தன்னாா்வ அமைப்பின் சாா்பில் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா் பங்கேற்று நூலை வெளியிட்டாா். இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கரோனா குறித்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தினா். இதைத்தொடா்ந்து சிடாா் அமைப்பின் நிா்வாக அறங்காவலா் சின்னராஜ் ஜோசப் பேசினாா். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளா் திருஞானம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரி கணேசன், மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் மருத்துவா் விஜயசரவணன், சிடாா் நிறுவன அறங்காவலா் நவமணி மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments