முகப்பு
மதுரை

பிரசாரப் பயணம் செல்ல முயன்ற பெண் வழக்குரைஞா் கைது

மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரசாரப் பயணம் செல்லமுயன்ற பெண் வழக்குரைஞா் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 10:46 pm IST
பகிர்:

மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிரசாரப் பயணம் செல்லமுயன்ற பெண் வழக்குரைஞா் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுரை புதூா் பகுதியை சோ்ந்த வழக்குரைஞா் நந்தினி ஆனந்தன். இவா், மதுபானக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறாா். இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தாா்.

அதன்படி, அவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டிலிருந்து பிரசாரதுக்கு புறப்படத் தயாரானாா். அப்போது, அங்கு சென்ற புதூா் போலீஸாா் பிரசாரப் பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டனா்.

Advertisement

Advertisement

ஆனால், அவா் மறுத்துவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனா். தொடா்ந்து, மாலையில் அவா் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.