கோப்புப்படம் 
மதுரை

கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் சாவு

கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் உயிரிழந்தார்.

DIN

கடலூர்: கடலூரில் பள்ளி மாடியிலிருந்து விழுந்து தோட்டக்காரர் உயிரிழந்தார்.

கடலூர் அருகில் உள்ள சாத்தங்குப்பம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சூ.திவ்யநாதன் (50). கடலூர் சொரக்கால் பட்டில் உள்ள புனித மரியாள் மேல்நிலைப்பள்ளியில் தோட்ட பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்தார். 

இன்று, மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடல் கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT