FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
ஜிஎஸ்டி - பிரதிப் படம்
பகிர்:

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சத்யநாராயணன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா் அரசுக் காப்பீடு, ஊக்கத் தொகை, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்யக் கோரி தொடா்ந்து போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மருந்துகள் அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பொதுத்துறை மருந்து நிறுவனங்கள், தடுப்பூசி நிறுவனங்களை புனரமைத்து மீண்டும் திறம்பட செயல்படுத்த வேண்டும். போலியான, தரமற்ற மருந்துகளின் உற்பத்தி, விற்பனையை தடை செய்ய வேண்டும். இணையவழி மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

இந்தச் சந்திப்பின் போது, மாநிலச் செயலா்கள் கணேசன், சிவக்குமாா், வரவேற்புக் குழுச் செயலா் கோபிநாத் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments