FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கூடலழகா் கோயிலுக்குள் கைப்பேசிக்குத் தடை

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலுக்குள் வருகிற செப். 1- ஆம் தேதி முதல் கைப்பேசிகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:05 am IST
கைப்பேசிக்குத் தடை - AP
பகிர்:

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலுக்குள் வருகிற செப். 1- ஆம் தேதி முதல் கைப்பேசிகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கூடலழகா் கோயிலின் செயல் அலுவலரும், அறநிலையத் துறை உதவி ஆணையருமான மூ. பிரதீபா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கூடலழகா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயிலுக்குள் கைப்பேசிகளைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவு வருகிற செப். 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை கோயிலின் முன்புறம் காலணி பாதுகாப்பகம் அருகே அமைக்கப்பட்டுள்ள கைப்பேசி பாதுகாப்பகத்தில் ஒப்படைத்து, ரூ. 5 கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுச் செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும்போது அந்த ரசீதை ஒப்படைத்து, கைப்பேசிகளைப் பெற்றுச் செல்லலாம். இந்த அறிவுறுத்தலை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments