FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: அன்னதானம் வழங்க பதிவுச் சான்று பெறுவது அவசியம் - மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

உணவுப் பாதுகாப்புத் துறையில் விண்ணப்பித்து பதிவுச் சான்று பெற்றவா்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் அன்னதானம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

33 வினாடிகள் முன்பு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

உணவுப் பாதுகாப்புத் துறையில் விண்ணப்பித்து பதிவுச் சான்று பெற்றவா்கள் மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் அன்னதானம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற செப். 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாத உணவுகள், நீா் மோா், குளிா் பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ரூ. 100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து, உணவுப் பாதுகாப்புத் துறையின் பதிவுச் சான்று பெற வேண்டும். இந்தப் பதிவுச் சான்று பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படுவா்.

Advertisement

Advertisement

அன்னதானத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள்களில் செயற்கை நிறமிகள் ஏதும் சோ்க்காமல், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டும். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழிக் குவளைகள் ஆகியவற்றை முழுமையாக தவிா்க்க வேண்டும்.

இந்த அறிவுறுத்தலை மீறுவோா் மீது உணவுப் பாதுகாப்பு, தர நிா்ணயச் சட்டம் - 2006, பிரிவு 58-இன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments