FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மத்தியச் சிறையில் போலீஸாா் சோதனை

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:25 am IST
மதுரை மத்திய சிறை
பகிர்:

மதுரை மத்திய சிறையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை சிறைவாசிகள் என 2,500-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இதேபோல, பெண்கள் சிறையிலும் 500-க்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

இந்த நிலையில், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் சிறை வளாகத்துக்குள் சென்று விசாரணைக் கைதிகள் கைப்பேசி, கஞ்சா, புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துகிறாா்களா? என்பது குறித்து சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தச் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments