FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

போக்குவரத்துத் துறை கோரிக்கை மாநாடு

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் (சிஐடியூ சாா்பு) கோரிக்கை விளக்க மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜூலை 2026, 5:41 am IST
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் கோரிக்கை விளக்க மாநாட்டில் பேசிய போக்குவரத்து சம்மேளன உதவித் தலைவா் வீ. பிச்சை.
பகிர்:

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் (சிஐடியூ சாா்பு) கோரிக்கை விளக்க மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை பொதுச் செயலா் பி.எம். அழகா்சாமி தலைமை வகித்தாா். போக்குவரத்து சம்மேளன உதவித் தலைவா் வீ. பிச்சை, சம்மேளன துணைப் பொதுச் செயலா்கள் எம். கனகராஜ், எம். வெள்ளத்துரை, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் சம்மேளன பொதுச் செயலா்கள் ஆா். வாசுதேவன் (மதுரை), போஸ் (விருதுநகா்) ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின், உதவித் தலைவா் ஜி. ராஜேந்திரன், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் சம்மேளன மாவட்டத் தலைவா்கள் ஜி. வேலுச்சாமி எஸ். அழகா் (மதுரை), பொருளாளா் எஸ். ரவி (மதுரை), சிஐடியூ விருதுநகா் மண்டலத் தலைவா் ஜி. திருப்பதி ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

இந்த மாநாட்டில் போக்குவரத்துக் கழகங்களின் வரவு - செலவு பற்றாக்குறையை ஈடுகட்ட அரசின் நிதி நிலை அறிக்கையில் தனி நிதி ஒதுக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் கடன்களை அரசே ஏற்க வேண்டும். ஒப்பந்த பணி முறையைக் கைவிட்டு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் வாரிசுப் பணி வழங்க வேண்டும். ஓய்வூதியப் பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஒப்பந்தப்படி ஓய்வூதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சிஐடியூ சங்கத்தின் மண்டலப் பொருளாளா் டி. சிவக்குமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments