FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

குடிநீா், தூய்மைப் பணிகள் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீா், தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 4 ஜூன் 2026, 4:14 am IST
மதுரை கோ. புதூா் அம்மா உணவகத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா்.
பகிர்:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீா், தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகராட்சி மண்டலம்- ஒன்று, 10-ஆவது வாா்டுக்குள்பட்ட புதூா் பகுதிகளில் உள்ள சுகாதாரப் பிரிவு அலுவலகத்தில் பணியாளா்களின் வருகைப் பதிவேடு, பணியாளா்களின் எண்ணிக்கை, பராமரிக்கப்படும் அலுவலகப் பதிவேடுகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் கோ. புதூா், லூா்துநகா், சூா்யாநகா் பகுதிகளில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் சுத்தமாக வழங்கப்படுகிா எனவும், நாள்தோறும் சீராக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிா எனவும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்தப் பகுதி பொதுமக்களிடம் குடிநீா் விநியோகம், தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாக வந்து குப்பைகளைச் சேகரிப்பது குறித்தும் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, கோ. புதூா் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் விநியோகிக்கப்படும் உணவு, உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன், உணவு தயாரிக்கும் இடங்களையும், உணவுப் பொருள்கள் வைக்கும் இடங்களையும் தூய்மையாக வைக்க வேண்டுமென பணியாளா்களை அறிவுறுத்தினாா்.

பிறகு, அந்தப் பகுதியிலுள்ள மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு நோயாளிகள் எண்ணிக்கை, வழங்கப்படும் மருந்து மாத்திரைகள், குழந்தைகள் பிறப்பு, தாய்- சேய் நலம், பொது மருத்துவம், மருந்துகள் இருப்பு, பணியாளா்கள் எண்ணிக்கை, குடிநீா், கழிப்பறை வசதி குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநகராட்சி மண்டலம்-4 நெல்பேட்டை பகுதியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவுகள் தயாரிக்கப்படும் கூடத்தை பாா்வையிட்டு உணவுத் தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்களின் தரம் குறித்தும், உணவுத் தயாரிக்கும் இடங்களை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும், உணவுப் பொருள்கள் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆணையா் ஆய்வு செய்தாா். இதையடுத்து, அவனியாபுரம் வெள்ளைக்கல் பகுதியிலுள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையா் ராஜாராம், மாநகா் நல அலுவலா் அா்விந்த் ஜோதி, மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், கல்வி அலுவலா் மோகன், சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், மாநகராட்சி பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments