FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈரான் சிறையிலிருந்து விடுதலையான  மீனவர்களுக்கு நிதி உதவி

ஈரான் சிறையிலிருந்து விடுதலையான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேருக்கும், தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

ஈரான் சிறையிலிருந்து விடுதலையான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேருக்கும், தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், முதுகுளத்தூர் நிலவள வங்கித் தலைவர் ஆர்.தர்மர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் 11 பேருக்கும் உதவித் தொகையை காசோலைகளாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காசிநாதபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments